உள்ளாட்சி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்வு: மதுக்கடைகளை மூட உத்தரவு

இதே போல், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 22ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி, கோவை, நெல்லை மாநகராட்சி மேயர் பதவி, காலியாக இருந்த நகராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பதவிகளில் காலியான இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அறிவிக்கப்பட்ட அனைத்து பதவிகளுக்கும் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. பா.ஜ.க, கம்யூனிஸ்டு கட்சிகளும் களத்தில் உள்ளன. தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் போட்டியிடவில்லை.
நெல்லை மேயர், புதுக்கோட்டை நகரசபை தலைவர் மற்றும் ஏராளமான உள்ளாட்சி பதவிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர 1486 பேர் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த பத்து நாட்களாகவே தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.
அனைத்து இடங்களிலும் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள், பிரசாரம் செய்து வருகிறார்கள்.
நாளையுடன் ஓய்வு
தற்போது மாநிலம் முழுவதும் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கட்சி தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்டு வருகிறார்கள். சூடு பிடித்துள்ள உள்ளாட்சி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது.
வெளியேற உத்தரவு
அதன்பிறகு குறிப்பிட்ட மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி பகுதிகளுக்கு தொடர்பு இல்லாத அனைவரும் அந்தந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. ஓட்டுப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.
18ஆம் தேதி வாக்குப்பதிவு
உள்ளாட்சி இடைத் தேர்தல் வருகிற 18ஆம் தேதி நடைபெறுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான இடைத் தேர்தலுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கை
மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெறுகிறது.
மதுக்கடைகளை மூட உத்தரவு
இதனிடையே செப்டம்பர் 16ம் தேதி மாலை 5 மணி முதல் 18ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதே போல், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 22ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications