காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மோடிக்கு கருணாநிதி கடிதம்!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பிரதமருக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திரமோடியிடம் நேரில் வலியுறுத்தியிருந்தார். அதைத்தொடர்ந்து கர்நாடக அனைத்துக் கட்சி குழு கூட்டம் அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் பிரதமரை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்று தெரிவித்து திரும்பியது. இதன்பிறகு ஜெயலலிதா கடிதம் மூலம் மோடிக்கு மீண்டும் தனது கோரிக்கையை வலியுறுத்தினார்.

இந்நிலையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியும் பிரதமர் நரேந்திரமோடிக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
"வணக்கம். சட்டத்தில் வலியுறுத்தியுள்ளபடி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு நீர்வளத் துறைக்கு உத்தரவிடுவீர்கள் என்ற நோக்கத்திற்காக இந்த கடிதத்தை எழுதியுள்ளேன்.
இதுதொடர்பாக, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட பல கமிட்டிகளும் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டியது அவசியம். இந்த வாரியம்தான், காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின் செயலாக்கத்தை கண்காணிக்கும் அதிகாரம் பெற்றது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக் கட்சி குழு கூட்டத்தை கூட்டுமாறு தமிழ்நாடு அரசை நான் கேட்டுக்கொண்டேன். அதுபோன்ற கூட்டம் மூலமாகத்தான் தமிழகத்தின் ஒற்றுமையை காண்பிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், தமிழக அரசு எனது கோரிக்கையை ஏற்கவில்லை.
அதிமுக அரசு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தபிறகு கடந்த மூன்றாண்டு காலமாக, நீரின்றி குறுவை சாகுபடி நடைபெறவில்லை. குறுவை சாகுபடி பொய்த்ததால் காவிரி டெல்டா பகுதியில் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். மேலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் மேலாண்மை வாரியம் அமைக்க தடை ஏதுமில்லை. காவிரி நடுவர்மன்றத்தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை விதிக்கப்படாததால் வாரியம் அமைக்க தடை ஏதுமில்லை. எனவே நான் மீண்டும் ஒருமுறை கேட்பதெல்லாம், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழக விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்பதுதான்".
இவ்வாறு அந்த கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications