எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே?... மாநில அரசில் கையில் முடிவு- மத்திய அரசு கோர்ட்டில் பதில்!
தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பதை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது.
மதுரை : தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமையும் என்பதை மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு பதில் மனுவில் கூறியுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரி பாஸ்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 15க்கும் மேற்பட்ட தென்மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றும், மதுரையில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளதாகவும் அவர் மனுவில் கூறியிருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் மத்திய அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது என்பதை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இது வரை தமிழகத்தில் 5 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்றும் பதிலில் கூறப்பட்டுள்ளது.
200 ஏக்கர் நிலம், போதுமான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ள இடத்திலேயே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 5 இடங்களில் ஆய்வு நடந்துள்ளதாக கூறியுள்ள மத்திய அரசு எந்தெந்த இடங்கள் அவை என்பதை குறிப்பிடவில்லை.
தொடர்ச்சியாக எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சரும், முதல்வரும் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமையும் என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்று சட்டசபையில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு கையில் தான் முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications