பெண் பத்திரிகையாளர்களை மோசமாக சித்தரிக்கும் 'செக்கச் சிவந்த வானம்'! வலுக்கும் கண்டனங்கள்
சென்னை: மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகியுள்ள, 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் பெண் பத்திரிகையாளர்கள் இழிவாக காண்பிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் சமீபத்தில் மோசமான கருத்து ஒன்றை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்திருந்தார்.
இதனால் கொதிப்படைந்த பத்திரிக்கையாளர்கள் எஸ்.வி. சேகர் வீட்டை முற்றுகையிட்டனர். போராட்டங்களை நடத்தினர்.
[ மர்மமாக செத்து மடியும் காட்டு ராஜா.. 20 நாளில் 21 சிங்கங்கள் மரணம்.. கிர் காடுகளில் என்ன நடக்கிறது! ]

எஸ்வி சேகர் எஸ்கேப்
இதையடுத்து காவல்துறையினர் எஸ்.வி. சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரைத் தேடி வருவதாகவும் கூறினார். ஆனால் நீதிமன்றத்தின் கெடுபிடிக்கு நடுவேயும், காவல்துறை ஆர்.எஸ்.வி சேகரை கைது செய்ய முடியவில்லை. எனவே எஸ்.வி.சேகர் குறித்தும், காவல் துறை குறித்தும் சமூக வலைத்தளங்களில், கிண்டல், கேலி பதிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

ஆபாச காட்சிகள்
இந்த நிலையில்தான் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் எஸ்.வி. சேகரின் கருத்துக்களுக்கு ஆமாம் போடுவது போல காட்சிகள் இடம் பிடித்துள்ளன.
திரைப்படத்தில் கதாநாயகர்களில் ஒருவரான, அரவிந்தசாமி, திருமணத்தை தாண்டி ஒரு பெண் பத்திரிகையாளருடன் கள்ள உறவு வைத்துக் கொள்வதாக, படத்தில் காண்பிக்கப்படுகிறது. அந்த பெண் பத்திரிக்கையாளர், மிக சிறிய ஆடையை அணிந்துகொண்டு ஆபாச தோற்றத்துடன் வலம் வருகிறார்.
பத்திரிகையாளர்கள் கண்டனம்
அந்தப் பெண் பத்திரிக்கையாளரை டிவி கூத்தாடி என்று அழைப்பது போல படத்தில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பெண் பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பத்திரிக்கையாளர்கள் குறித்து யாரோ எழுதிய வசனத்திற்கு நீங்கள் நியாயம் கற்பிக்க முயற்சி செய்கிறீர்களா மணிரத்தினம்? இதற்கு உங்களுக்கு கடுமையான கண்டனங்கள் என்று இந்த பெண் பத்திரிக்கையாளர் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

இயல்புக்கு மாறானது
தமிழக பெண் பத்திரிகையாளர்கள் யாருமே இவ்வாறான ஆடைக் கலாச்சாரம் இல்லாதவர்கள். ஆனால் இதுபோன்ற ஒரு கதாபாத்திரம் திரைப்படத்தில் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது என்பதை, கொஞ்சம் விபரம் தெரிந்தவர்களுக்கு கூட புரியும். அப்படியானால் மணிரத்தினத்தின் உள்நோக்கம் என்ன? எஸ்.வி சேகருக்கு ஆதரவளிப்பதுதானா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

நெட்டிசன்கள் ஆதங்கம்
இதுதான் சைக்கிள் கேப்பில் சிந்து பாடுவது. மணி வகையறாக்களின் திறமை, என்று இந்த நெட்டிசன் கூறுகிறார். இந்த சமூகத்தில் ஒரு எஸ்.வி.சேகர் மட்டும் கிடையாது. நிறைய சேகர்கள் இருக்கிறார்கள் என்பதை செக்கச் சிவந்த வானம் நிரூபித்து விட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications