போரூர்: மீட்புப் பணியில் 300 வீரர்கள்.. இடிபாடுகளை அகற்ற 2 நாட்கள் ஆகும் எனத் தகவல்
சென்னை: போரூரில் இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டிட இடிபபாடுகளை முழுமையாக அகற்ற இரண்டு நாட்கள் ஆகும் என தேசிய பேரிட மீட்பு குழு கண்காணிப்பாளர் செல்வன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை சென்னையில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டுமானம் நடந்து கொண்டிருந்த 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்புப் படையினரும் போலீஸாரும் அப்பகுதிக்கு விரைந்து வந்து உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 260 பேர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

11 பேர் பலி...
இன்று காலை நிலவரப்படி, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிகை 11 ஆக அதிகரித்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களில் 26 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு நாட்கள் ஆகலாம்...
இந்நிலையில், கட்டிட இடிபாடுகளை முழுமையாக அகற்ற இரண்டு நாட்கள் ஆகும் என தேசிய பேரிடர் மீட்பு குழு கண்காணிப்பாளர் செல்வன் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது கட்டிட இடிபாடுகளை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றுவருவதாகவும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க நவீன கேமிராக்கள் பயன்படுத்தபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய விபத்து...
தென்னிந்தியாவில் நடந்த மிகப்பெரிய கட்டிட விபத்து இதுதான் எனத் தெரிவித்துள்ள செல்வன், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் குரல் கேட்டு அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், கட்டிட இடிபாடுகளை முழுமையான அகற்றில்தான் அனைவரையும் மீட்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணி...
மீட்புப் பணியில் துணை ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படை, கமாண்டோ படையினர், தீயணைப்புப் படை வீரர்கள், மெட்ரோ ரயில் பணியாளர்கள் என சுமார் 300 பேர் ஈடுபட்டுள்ளனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications