தடுப்பு சுவரை உடைத்து ரயில் பாதையில் புகுந்த பஸ்... அதிர்ஷ்டவசமாக 70 பயணிகள் உயிர் தப்பினர்!
சென்னை: சென்னையில் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று ரயில் தண்டவாளத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவர் மற்றும் போக்குவரத்துத் துறை காவலரின் சாதுர்யமான நடவடிக்கைகளால் பேருந்தில் இருந்த 70 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து அரியலூருக்கு சென்று கொண்டிருந்தது அரசுப் பேருந்து ஒன்று. அப்போது தாம்பரம் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையின் குறுக்கே இருசக்கர வாகனம் ஒன்று திடீரென வந்தது. பேருந்து அந்த வாகனத்தின் மோதி விடாமல் இருக்க முற்பட்டு பேருந்தைத் திருப்பினார். இதனால் சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பேருந்து ரயில் தண்டவாளத்தில் சிக்கியது.

அப்போது, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. சட்டென நடக்க இருந்த விபரீதத்தை உணர்ந்த போக்குவரத்துத்துறை காவலர் அருண் பிரசாத், விரைந்து சென்று தான் அணிந்திருந்த சிவப்பு நிற ஒளிரும் கோட்டை ஆட்டிக் காட்டியதால் ரயிலின் வேகம் குறைந்தது.
இதற்கிடையே, ரயில் வருவதைக் கண்டு அப்பேருந்தின் டிரைவர் நாகூர் கனி, அதிவிரைவாக பேருந்தை தண்டவாளத்தில் இருந்து பேருந்தை வெளியேற்றினார். பேருந்து தண்டவாளத்தில் இருந்து வெளியேறியவுடனேனே, அந்த இடத்தில் ரயில் கடந்தது.
அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
எனினும், சாமர்த்தியமாகச் செயல்பட்டு பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்த பேருந்து ஓட்டுநரையும், போக்குவரத்துத் துறை காவலரையும் மக்கள் பாராட்டினர்.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications