அண்ணா, எம்ஜிஆர், ஜெ. சமாதிகளை பீச்சிலிருந்து அப்புறப்படுத்துங்க.. டிராபிக் ராமசாமி அதிரடி வழக்கு
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சமாதிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை: கடலோர ஒழுங்கு முறை விதிகளின்படி அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளை இடமாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.
அண்ணா, எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகிய முதல்வர்களுக்கு அண்ணா சமாதியில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட தமிழக அரசு உத்தேசித்துள்ளது.
இந்நிலையில் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்துள்ளார்.

இன்று விசாரணை
அந்த வழக்கானது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகள் மெரினாவில் உள்ளன.

500 மீட்டர் தூரத்தில்
இதில் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு மணி மண்டபம் கட்ட அனுமதித்துள்ளது. கடலோர ஒழுங்கு முறை சட்டத்தின்படி கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்குள் எந்தவித கட்டுமானங்களுக்கு இருக்க கூடாது என்பது விதியாகும்.

சமாதிகளை மாற்ற வேண்டும்
எனவே இது மத்திய அரசின் சட்டத்தை மீறும் செயலாகும்.தேசப்பிதா காந்தியடிகளுக்கு மண்டபமானது கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இவர்களின் சமாதிகளை மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசிடம் விளக்கம்
இந்த மனு மீது விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அப்போது 2 வார அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசின் வழக்கறிஞர் கெடு கேட்டுள்ளதை அடுத்து இந்த வழக்கானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications