டாஸ்மாக் கடைகளை மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன? நீதிமன்றம் கேள்வி
டாஸ்மாக் கடைகளை மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: டாஸ்மாக் கடைகளை மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டத்தின்போது 23 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை அண்மையில் நடைபெற்றது. அப்போது அவர்கள் மீதான வழக்குகளை நீதிபதிகள் ரத்து செய்தனர். இதையடுத்து டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்துவது, நேரத்தை குறைப்பது, ஆண்டுக்கு 500 கடைகளை படிப்படியாக மூடுவது என்பன உள்ளிட்டவற்றை அமல்படுத்துவது தொடர்பாக விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்றைய தினம் நீதிபதிகள் கிருபாகரன், பார்த்தீபன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உரிமம் இல்லாத டாஸ்மாக் பார்கள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் மூடப்படும் என்று தமிழக அரசு பதில் மனுவில் கூறியது. அதில் நீதிபதிகள் கூறுகையில், ஏற்கெனவே 10 மணிக்கு திறக்கப்பட்ட கடைகளை 12 மணி என்று மாற்றினீர். ஆனால் அந்த நேரத்திலும் மதிய உணவு அருந்தாமல் கூட டாஸ்மாக் கடையில் காத்து கிடக்கும் நிலை உள்ளது.
இதனை தடுப்பதற்கு இன்னும் 2 மணி நேரம், தாமதமாக அதாவது 2 மணிக்கு திறந்தால் என்ன. இதுஅரசின் கொள்கை முடிவு என்பது எங்களுக்கு தெரியும் . இது தொடர்பான விளக்கம் அடுத்த வாரம் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications