சந்தானத்திற்கு முன்ஜாமீன் வழங்க தாக்குதலுக்குள்ளான வக்கீல் தரப்பு ஹைகோர்ட்டில் எதிர்ப்பு!
நடிகர் சந்தானத்தின் முன்ஜாமீன் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் சந்தானத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
பணம் கொடுக்கல் வாங்கள் தகராறில் பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்த் என்பதை நடிகர் சந்தானம் தாக்கினார். இதுதொடர்பாக அவர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து கைது நடவடிக்கை பயந்து நடிகர் சந்தானம் தலைமறைவானார். மேலும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்தமனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சந்தானத்திற்கு முன்ஜாமீன் வழங்க பிரேம் ஆனந்த் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து முன்ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையை சென்னை ஹைகோர்ட் நாளைக்கு ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications