சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 90% நிறைவு- 2017 மே-க்குள் முழுமையடையும்?
90 சதவீத சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் வருகிற 2017-ம் ஆம் ஆண்டு மே-க்குள் அந்தப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்து சேவையை தொடங்க தயார் நிலைக்கு வந்துவிடும் என்றும் அதிகாரிகள் தரப்பில
சென்னை: கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவடைந்து தயார் நிலைக்கு வந்துவிடும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியிருப்பதாவது: மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், எஞ்சிய பணிகள் அடுத்த ஆறு மாதத்தில் முடிவடைந்து விடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக பல்வேறு நாடுகளில் இருந்து பதினோரு ராட்சத இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சென்னை மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. அவற்றில் தற்போது 5 இயந்திரங்கள் மட்டுமே சுரங்கப்பாதை தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.
எஞ்சிய இயந்திரங்கள் பணி முடிந்து சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன. தற்போது, சுரங்கப்பாதை தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள இயந்திரங்களும் எஞ்சிய பணி முடிக்கப்பட்டவுடன் திருப்பி அனுப்பப்படவுள்ளது.
மொத்தமுள்ள, 24 கிலோ மீட்டர் தொலைவில் 18 கி.மீ அளவிலான சுரங்கம் தோண்டும் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. அதில் 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் தோண்டும் பணிக்கு ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 6 கிலோ மீட்டர் தொலைவு தோண்டும் பணிகள் ரயில் நிலையங்கள் அருகில் வருவதால் அவற்றில் தோண்டும் பணிக்கு ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை.
சில இடங்களில் மண்ணின் தன்மை குறித்து கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. கடின பாறைகளை குடைந்து சில இடங்களில் சுரங்கப்பாதை தோண்டப்பட்டது.
வேறு சில இடங்களில் கலவை மண்ணாக இருந்தது. சில இடங்களில் உலர் தன்மையுடைய மண் காணப்பட்டது. அந்த மண் பல்வேறு இடங்களில் சாலை மேற்பரப்பில் விரித்து மெட்ரோ ரயில் தடம் அமைக்க உதவியது.
கடந்த 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் எல்என்டி உள்ளிட்ட நிறுவனங்களுடன் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானம், வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் ஏற்படுத்தியது.
அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அண்ணா சாலையில் சுரங்கம் தோண்டுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதாவது அந்த பணியை மேற்கொண்ட நிறுவனம் அந்தப் பணியை கைவிட்டது. இதனால் சென்னை மெட்ரோ நிறுவனம் அந்த நிறுவனத்தை ஒப்பந்தப் பணியிலிருந்து நீக்கியது.
இதனையடுத்து அந்தப் பணி எல்என்டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அந்த பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications