மழை பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
மழை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை என்று சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: மக்கள் பணி தான் எங்களுக்கு முக்கியம்; விடுமுறை கிடையாது என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார். மழை பற்றி தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அ.தி.மு.க தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் மழை நீர் குளம் போல காட்சி அளித்துவருகிறது.

சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர்கள் அவ்வை சண்முகம் சாலையில் இறங்கி மழை நீரை அகற்றும் பணியைப் பார்வையிட்டார். அப்போது, ஆணையரிடம் மக்கள் புகார் தெரிவித்தனர். இதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் விஸ்வநாதன் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை பற்றி தேவையற்ற வதந்தி பரப்ப வேண்டாம் என்று கூறினார். தேவையற்ற வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில சுரங்கப்பாதையில் மட்டும் நீர் எடுக்கும் பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் பணி தான் எங்களுக்கு முக்கியம்; விடுமுறை கிடையாது என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications