சென்னையில் இன்று வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்- மாவட்ட ஆட்சியர்
இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சென்னை: இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நேற்று 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னை நகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது.

இதனால் சென்னை ஆட்சியர் அன்புசெல்வன் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்களுக்கு நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில் பள்ளிகள் வழக்கம்போல் துவங்கும்போது பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கவில்லை என உறுதிப்படுத்த வேண்டும்.
சுற்றுச்சூழல் நன்கு உள்ளது என்பதையும், வகுப்பறைகளில் மின்கசிவு இல்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி சான்றளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது.
அதனால் இன்று பள்ளிகள் இயங்குமா? என்கிற கேள்வி பெற்றோரிடம் எழுந்தது. அதுபோல, மழை பெய்தால் விடுமுறை அறிவிப்பது குறித்து காலை ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் சொல்லி இருந்தனர்.

இன்று அதிகாலை ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை காரணமாக ஐந்து நாட்களுக்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. அதிகாரிகளின் ஆலோசனையின்படி பள்ளிகளில் தேங்கி இருந்த மழை நீர் அகற்றப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, 9 பள்ளிகள் தவிர்த்து இன்று சென்னையில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications