முதல்வர் எடப்பாடி இன்று டெல்லி பயணம்..ராம்நாத் கோவிந்தை நேரில் சந்திக்கிறார்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அங்கு ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளார்.
அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் அணிகளின் அரசியல் நகர்வுகள் டெல்லியை மையமாகக்கொண்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜகவின் தலைமை அதிமுகவின் இரு அணிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் டெல்லி சென்று மோடியை சந்தித்து பேசினார்.
இதனிடையே பாஜக சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு அளிக்குமாறு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தமிழக முதல்வர்ர் எடப்பாடி பழனிச்சாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் தொலைபேசி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு கோரினார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க. அம்மா அணி ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், மோடியின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். எடப்பாடியின் முடிவுக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிப்பார்களா? என்பது கேள்விக்குறியே. அதே நேரத்தில் பன்னீர்செல்வம் பக்கமும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார். அங்கு ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பேச இருக்கிறார். இந்த சந்திப்பின் போது அதிமுக அம்மா அணியின் ஆதரவை ராம்நாத் கோவிந்திடம் தெரிவிக்க இருக்கிறார். வேட்புமனு தாக்கலிலும் எடப்பாடி கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications