எம்.ஜி.ஆர். ஆட்சி தான் நடக்கிறது, வெற்றிடம் இல்லை: ரஜினிக்கு முதல்வர் பதில்
சென்னை: தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி நடப்பதாகவும், வெற்றிடம் எதுவும் இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரஜினிகாந்துக்கு பதில் கொடுத்துள்ளார்.
தான் ஆட்சிக்கு வந்தால் எம்.ஜி.ஆர். ஆட்சி நடக்கும் என்றும் தற்போது தமிழகத்தில் தலைமை இல்லாமல் வெற்றிடம் இருப்பதாகவும் புதுக்கட்சி துவங்கப்போகும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மகளிர் தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் பெரியார். அவரின் சிலையை அகற்றுவோம், சேதப்படுத்துவோம் என்று கூறுவது கண்டனத்திற்குரியது. அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிலைகளை அவமதிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி தான் நடக்கிறது. அதிமுக ஆட்சி எம்.ஜி.ஆர். ஆட்சி தான். எம்.ஜி.ஆர். துவங்கிய இயக்கத்தை அவர் மறைந்த பிறகு ஜெயலலிதா இந்தியாவிலேயே முதன்மை இயக்கமாக கொண்டு வர பாடுபட்டார்.
கடைசி வரை மக்கள் பணியாற்றிய இரண்டு தலைவர்களின் கட்சி தான் அதிமுக. அதனால் இங்கு வெற்றிடம் என்பதே இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தார்களோ அதே வழியில் தான் நாங்களும் ஆட்சி செய்கிறோம். தமிழகத்தில் எந்த வெற்றிடமும் இல்லை என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications