எம்.ஜி.ஆர். ஆட்சி தான் நடக்கிறது, வெற்றிடம் இல்லை: ரஜினிக்கு முதல்வர் பதில்
சென்னை: தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி நடப்பதாகவும், வெற்றிடம் எதுவும் இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரஜினிகாந்துக்கு பதில் கொடுத்துள்ளார்.
தான் ஆட்சிக்கு வந்தால் எம்.ஜி.ஆர். ஆட்சி நடக்கும் என்றும் தற்போது தமிழகத்தில் தலைமை இல்லாமல் வெற்றிடம் இருப்பதாகவும் புதுக்கட்சி துவங்கப்போகும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மகளிர் தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் பெரியார். அவரின் சிலையை அகற்றுவோம், சேதப்படுத்துவோம் என்று கூறுவது கண்டனத்திற்குரியது. அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிலைகளை அவமதிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி தான் நடக்கிறது. அதிமுக ஆட்சி எம்.ஜி.ஆர். ஆட்சி தான். எம்.ஜி.ஆர். துவங்கிய இயக்கத்தை அவர் மறைந்த பிறகு ஜெயலலிதா இந்தியாவிலேயே முதன்மை இயக்கமாக கொண்டு வர பாடுபட்டார்.
கடைசி வரை மக்கள் பணியாற்றிய இரண்டு தலைவர்களின் கட்சி தான் அதிமுக. அதனால் இங்கு வெற்றிடம் என்பதே இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தார்களோ அதே வழியில் தான் நாங்களும் ஆட்சி செய்கிறோம். தமிழகத்தில் எந்த வெற்றிடமும் இல்லை என்றார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications