அரசியல் சூட்டுக்கு குட்டி பிரேக்.. மலர் ஷோவை தொடங்கி வைக்க ஊட்டி போகும் எடப்பாடியார்!
உதகையில் மலர்கண்காட்சியை தொடக்கி வைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஊட்டி செல்கிறார்.
சென்னை: ஊட்டியில் 3 நாட்கள் நடைபெற உள்ள மலர்கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடக்க வைக்க உள்ளார். இதற்காக நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து ஊட்டி செல்கிறார்.
கோடைகாலத்தில் சீசனை அனுபவிக்க வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாபயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் மே மாதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
ரம்மியமான சூழலை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள், கோடை விழாவில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் அள்ளிச் செல்கின்றனர்.

அரசு தோட்டக்கலைத்துறை
தோட்டக்கலைத் துறை சார்பில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சி மற்றும் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ரோஜா கண்காட்சியை பல்லாயிரக்கணக்கானோர் ரசித்தனர்.

கோடை விழா
இந்த ஆண்டுக்கான கோடை விழா அங்கு தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான 121-வது மலர் கண்காட்சி, ஊட்டி தாவரவியல் பூங்காவில் வருகிற 19ஆம் தேதி துவங்கி மூன்று நாள் நடைபெற உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி
மலர் கண்காட்சியை தொடக்கி வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஊட்டிக்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து அவர் ஊட்டி செல்ல உள்ளார்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ்
மே 19ஆம் தேதி தொடங்கும் மலர் கண்காட்சி மே 21ஆம் தேதி நிறைவடைகிறது. நிறைவு விழாவில் ஆளுநர் வித்யாசாகர்ராவ் பங்கேற்கிறார். உதகையில் 1896ஆம் ஆண்டு முதல் மலர்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications