மனைவியிடம் அடிவாங்கிய வேகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்த கணவர்
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே மனைவியிடம் அடிவாங்கியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள காந்தி நகரில் இருக்கும் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் முத்துசாமி(40). செருப்பு தைத்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அவரது மனைவி கவிதா(32). அவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

சனிக்கிழமை இரவு முத்துசாமி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரின் இரண்டாவது மகள் மஞ்சுளா தனது பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு முத்துசாமி மறுத்துவிட்டார்.
இதனால் முத்துசாமிக்கும், கவிதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முத்துசாமி தனது மனைவியை அடித்தார். அடி வாங்கிய கவிதா முத்துசாமியை பதிலுக்கு அடித்தார். இந்த மோதலில் கவிதா காயம் அடைந்தார்.
அதனால் அவர் மருத்துவமனைக்கு சென்றார். மனைவி தன் மீது தான் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்றுள்ளதாக தவறாக நினைத்த முத்துசாமி பயந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications