தமிழகத்தின் 'டாப்' கோடீஸ்வர வேட்பாளர் வசந்தகுமார்... ரூ332.27 கோடி சொத்து; ரூ122.53 கோடி கடன்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களில் காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார்தான் மிகப் பெரிய கோடீஸ்வரர்... தமக்கு ரூ332.27 கோடி சொத்து இருப்பதாகவும் ரூ122.53 கோடி கடன் இருப்பதாகவும் வேட்புமனுவில் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் தற்போதைய நிலையில் வேட்பாளர்களில் சுமார் 25% பேர் கோடீஸ்வரர்கள். வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகுதான் தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வரர்கள் எத்தனை பேர் என்பது தெரிய வரும்.

வசந்தகுமார் டாப்
பெரும்பாலான தமிழக அமைச்சர்களின் சொத்து மதிப்புகள் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் பல கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கோடீஸ்வர வேட்பாளர்களில் வசந்த் அண்ட் கோ நிறுவன உரிமையாளர் வசந்த குமார் முதல் இடத்தில் உள்ளார்.

நாங்குநேரி
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறார். நாங்குநேரி தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள அவர் தமது சொத்துக்கள் மற்றும் தம் குடும்பத்தினர் சொத்துக்கள் பற்றிய தகவல்களை ஆவணங்களுடன் கொடுத்துள்ளார்.

ரூ332 கோடி சொத்து
அதில் தமக்கு ரூ.332.27 கோடிக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள வசந்த் அன்கோ கடைகளின் வருவாய் அடிப்படையில் அவர் சொத்து மதிப்பை பட்டியலிட்டுள்ளார்.

ரூ122 கோடி கடன்
மேலும் பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து ரூ.122.53 கோடி கடன் வாங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வேட்புமனுத்தாக்கல் முடிவடையும் நிலையில் வசந்தகுமாரே இந்த டாப் கோடீஸ்வர இடத்தைத் தக்க வைக்கக் கூடும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications