ஜெயலலிதா படத்துக்கு செருப்பு மாலை போட்டு வட இந்திய காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்ததற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா படத்துக்கு செருப்பு மாலை போட்டு வட இந்திய காங்கிரஸ்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளிகள் என்று கூறப்பட்டவர்கள் யாரும் இல்லாத நிலையில், அவர்களுக்கு உதவியவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் அசாதாரண கால தாமதம் செய்ததைக் காரணம் காட்டி, தூக்கு தண்டனையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.

மேலும் சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதை மாநில அரசின் முடிவுக்கு விட்டுவிட்டனர் நீதிபதிகள்.
இந்த உத்தரவு வெளியான 24 மணி நேரத்துக்குள், பேரறிவாளன், முருகன், சாந்தன் மட்டுமல்ல, 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் சேர்த்தே விடுதலை செய்வதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பு தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த, அதற்கு எதிரான பரப்புரையை வட இந்திய ஆங்கில ஊடகங்கள் ஆரம்பித்துவிட்டன. விடுதலை உத்தரவு பிறப்பித்த ஜெயலலிதாவுக்கு எதிராக மிக மோசமான, கேவலமான ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர் காங்கிரஸ்காரர்களும், வட இந்தியர்களில் ஒரு பகுதியினரும்.
மும்பையில் நேற்று காங்கிரஸ்காரர்கள் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா படத்துக்கு செருப்பு மாலையும், ராஜீவ் காந்திக்கு மலர் மாலையும் அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் ஜெயலலிதாவை இந்தியில் மோசமான வார்த்தைகளால் திட்டி கோஷங்கள் எழுப்பினர்.
8 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதியான, தேர்தல் மூலம் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரை, மத்தியில் ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சியின் அலுவலகத்திலேயே இப்படி மோசமாக கேவலப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications