2016 சட்டசபை தேர்தலில் பல்லாயிரம் கோடி ரூபாய் சர்ச்சையில் சிக்கிய சிறுதாவூர் பங்களா!
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சிறுதாவூர் பங்களாவில்தான் பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டதாக கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் பெரும் சர்ச்சையே வெடித்தது.
சென்னை: 2016 சட்டசபை தேர்தலின் போது பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் பதுக்கப்பட்டதாக சர்ச்சையில் சிக்கியதுதான் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா.
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டது. சர்ச்சைகளின் மைய புள்ளியாக சிறுதாவூர் பங்களா இருந்து வருவதால் தீ விபத்து குறித்து பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.
சட்டசபை தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் வைகோ. தமிழக அரசியலையே தம் பக்கம் திரும்பிப் பார்க்கும் வகையில் நாள்தோறும் அதிரடி குற்றச்சாட்டுகளை பேசிவந்தார்.

பல்லாயிரம் ரூபாய் கோடி
அந்த வகையில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் ரொக்கம் சிறுதாவூர் பங்களாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தமக்கு நம்பகமான தகவல் கிடைத்திருக்கிறது என பேசி பெரும் பரபரப்பை கிளப்பினார் வைகோ. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தும் பார்த்தார் வைகோ.

வீடியோக்கள்...
தற்போது வருமானவரித்துறை சோதனையில் சிக்கியிருக்கும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் இதற்காகவே வைகோ மீது போலீசிலும் புகார் கொடுத்திருந்தார். சிறுதாவூர் பங்களாவில் லாரிகள் தார்பாய் போட்டு மூடப்பட்டிருந்ததாக வீடியோக்கள் வைரலாகவும் பரவின.

லஞ்சப் பணம்
10 லாரிகளில் கொண்டுவரப்பட்டு சிறுதாவூர் பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்ட பணம்தான் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும் பேச்சு எழுந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் கூட சிறுதாவூர் பங்களாவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆவணங்கள் எரிப்பு?
இதுவும் சர்ச்சையாகிப் போனது. அதேபோல் சிறுதாவூர் பங்களா அமைந்துள்ள நிலமே தலித்துகளுக்கானது என்ற சர்ச்சையும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் மிக முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
-
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications