சென்னையில் பயங்கரம்.. பட்டப்பகலில் மாநகராட்சி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அலறியடித்து ஓடிய மக்கள்
மாநகராட்சி ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை: காசிமேடு பகுதியில் மாநகராட்சி ஊழியர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலிலேயே துரத்தி துரத்தி சென்று படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காசிமேடு, அமராஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். 40 வயதான இவர், ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தவர்.

இன்று காலை சிவக்குமார் காசிமேட்டில் உள்ள காசிபுரம் என்ற பகுதிக்கு சென்றார். எப்போதுமே பரபரப்பாக, மக்கள் அதிக அளவு நடமாடக்கூடிய பகுதி இது. இங்குள்ள ஒரு டீ கடையில் சிவக்குமார் டீ குடித்துக் கொண்டு இருந்தார். சிவக்குமார் டீ கடைக்கு செல்லும்முன்பே அங்கு 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அரிவாள், கத்தியுடன் ஒளிந்திருந்து, சிவக்குமாருக்காக காத்துக் கொண்டிருந்தது.
பின்னர் சிவக்குமார் டீ குடித்துகொண்டிருந்தபோது, அவரை அந்த கும்பல் சுற்றிக் கொண்டது. கும்பலை கண்டதும் வெலவெலத்துப் போன சிவக்குமார், ஓட்டம் பிடிக்க தொடங்கினார். ஆனால் சிவக்குமாரை விடாமல் அந்த கும்பல் துரத்தி துரத்தி சென்று சரமாரியாக வெட்டியது. இதில் உடலின் அநேக இடங்களில் அரிவாள், கத்தி பட்டு சிவக்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
சிவக்குமாரை ஓட ஓட விரட்டியதை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் சிலர் அலறியடித்து ஓட்டமும் பிடிக்க தொடங்கினர். அப்போது அங்கிருந்த நபர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவக்குமாரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவக்குமார் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக காசிமேடு போலீசார் விசாரணையை கையிலெடுத்துள்ளனர். அதில், சிவக்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கால்வாய் தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல, வேறு ஒரு பிரச்சனை காரணமாக கஞ்சா வியாபாரியுடனும் முன்விரோதம் தீவிரமாக இருந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிந்தது. எனவே சிவக்குமாரை கொலை செய்தது யார் என தங்களுடைய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications