மாநகராட்சி இன்ஜினியர் கொலையில் தொடர்ந்து மர்மம்: காரில் சென்ற முக்கிய நபர் யார்?
நெல்லை: நெல்லை மாநகராட்சி இன்ஜினியர் கொலையில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக அவரை காரில் அழைத்து சென்ற முக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாளையங்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். நெல்லை மாநகராட்சியில் தொழில் நுட்ப பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 27ம் தேதி இரவு காரில் குற்றாலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ராஜேந்திரன் கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்துவிட்டு அவரது உடலை மர்மநபர்கள் காரில் வைத்து விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக குற்றாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த கொலையில் இதுவரை துப்பு கிடைக்கவில்லை.
ராஜேந்திரன் கொலை தொடர்பாக அவருடன் பணிபுரிந்த மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ராஜேந்திரனுக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து தினமும் மது அருந்துவார். 27ம் தேதி இரவு நண்பர்களுடன் குடித்து வி்ட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். 10.30 மணிக்கு பாளை ஜோதிபுரம் திடலில் ராஜேந்திரன் நின்று கொண்டிருந்த போது நெல்லையை சேர்ந்த முக்கிய நபர்கள் 4 பேர் காரில் வந்துள்ளனர்.
அந்த நேரத்தில் அவரது மனைவி ராஜேந்திரனை போனில் தொடர்பு கொண்டார். அப்போது 10 நிமிடத்தில் வந்து விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் காரில் வந்த நபர்கள் அவரை தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். இதையடுத்து ராஜேந்திரன் அவருக்கு சொந்தமான காரில் புறப்பட்டபோது முக்கிய நபர் மட்டும் அவருடன் ஓன்றாக சென்றுள்ளார். மற்றவர்கள் அவர்கள் வந்த காரில் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ராஜேந்திரனுக்கு அவரது மனைவி போன் செய்தபோது போன் ஓலித்தும் அவர் எடுக்கவில்லை. இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராஜேந்திரனை காரில் அழைத்து சென்ற முக்கிய நபர் யார் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications