கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் உள்பட ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பரவியதாக தகவல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது- இவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பியவர்கள் என்றும் தகவலகள் வெளியாகி உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் தற்போது வரை இதை உறுதிப்படுத்தவில்லை.
கோயம்பேடு சந்தையில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்து வருகிறார்கள். கொரோனா தொற்று பரவி வருவதன் காரணமாக அண்மையில் மொத்த விலைக்கடைகள் மட்டும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் மிகக்குறைந்தஅளவு பணியாளர்கள் தவிர பெரும்பலான கூலி தொழிலாளர்கள், வியாபாரிகள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு சென்றுவிட்டனர். அப்படி சென்ற பலருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக களம் இறங்கி கூலித்தொழிலாளர்களை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து சொந்த ஊர் சென்றவர்களை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று ஒரு நாளில் கடலூரில் 122, விழுப்புரம் 49, சென்னையில் 266 , பெரம்பலூர், 25, அரியலூரில் 6 பேர் என ஏராளமானோருக்கு கொரோனா பரவியது. இவர்களில் பெரும்பாலோனோர் கோயம்படு சந்தை மூலம் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் ஆவர்.
இந்நிலையில் இன்றும் கோயம்பேடு சந்தையில் பணியாற்றியவர்கள் வழியாக விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா அதிகமாக பரவி உள்ளது. இந்த சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 89-ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. .இன்று பாதிக்கப்பட்டவர்களில் 34 பேர் பெண்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவலை மாவட்ட நிர்வாகமோ சுகாதாரத்துறையோ இதுவரை வெளியிடவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அல்லது சுகாதாரத்துறை இன்று மாலைக்குள் கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிடும். எனவே அதன்பிறகே மேற்கண்ட தகவலை உறுதி செய்ய இயலும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications