கட்-அவுட் விவகாரம்: தேமுதிக எம்.எல்.ஏ. சுபா, குடும்பத்தார் 3 பேர் மீது வழக்கு
சேலம்: சேலத்தில் கோவில் திருவிழாவுக்கு கட்-அவுட் வைக்கும் பிரச்சனை தொடர்பாக தேமுதிக எம்.எல்.ஏ. சுபா மற்றும் அவரது குடும்பத்தார் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இருக்கும் சார்வாய் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழா இன்று துவங்கியது. இந்த திருவிழா வரும் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி கிராமத்தினர் கெங்கவல்லி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. சுபாவின் அப்பா பெரியசாமியின் வீட்டிற்கு அருகில் அம்மன் கட்-அவுட்டை வைக்க வியாழக்கிழமை இரவு ஏற்பாடு செய்தனர்.
கட்அவுட் வைக்க பெரியசாமியும், அவரது மனைவி சுசீலாவும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுசீலா இது குறித்து தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் புகார் கொடுத்தது குறித்து அறிந்த கிராமத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு எம்.எல்.ஏ. சுபாவை கைது செய்யக் கோரி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை பார்த்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் வீரமணி, ஆத்தூர் டி.எஸ்.பி. சிவவேலியப்பன், இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சீனிவாசன் ஆகியோரும் அங்கு வந்து அவர்களை மறியலை கைவிடுமாறு கூறினர். ஆனால் மக்கள் மறியலை கைவிட மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து மக்கள் சிதறி ஓடினர். அதில் சிலரை போலீசார் பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து மக்கள் மீண்டும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிக்குமாறு கூறினர். இந்நிலையில் எம்.எல்.ஏ. சுபா, அவரது கணவர் ரவி, பெற்றோர் பெரியசாமி, சுசீலா ஆகியோர் மீது போலீசார் வாக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் எதிர் தரப்பை சேர்ந்த 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications