ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய வழக்கு: இளங்கோவன், விஜயதரணி நேரில் ஆஜராக நாகர்கோவில் கோர்ட் உத்தரவு
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய வழக்கில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயதரணி எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் ஆஜராக நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டம் கருங்கல் சந்தை திடலில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் விஜயதரணி எம்.எல்.ஏ. ஆகியோர் உரையாற்றினர்.

அப்போது அவர்கள் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசினர் என்று கூறி வழக்கறிஞர் ஞானசேகர் என்பவர் நாகர்கோவிலில் இருக்கும் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடர்ந்தார்.
இந்த வழக்குகளை அவசர வழக்குகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், ஜெயலலிதா நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரியும் அவர் இரண்டு மனுக்களை தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி(பொறுப்பு) ஜான் ஆர்.டி. சந்தோஷம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த அவர் அவதூறு வழக்கில் இளங்கோவன் வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதியும், விஜயதரணி ஏப்ரல் 11ம் தேதியும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications