ராணுவத் தளவாடங்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு என்ற பெருமையை பெறுவோம்: நிர்மலா சீதாராமன்
ராணுவத் தளவாடங்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு என்கிற பெருமையை விரைவில் இந்தியா பெறும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : ராணுவ தளவாடங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு என்கிற பெயர் விரைவில் மாறி, அதிக அளவு தளவாடங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த திருவிடந்தையில், இன்று முதல் 14ம் தேதி வரை ராணுவக் கண்காட்சி நடைபெறுகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் நடத்துகிறது.

ரூபாய் 480 கோடி செலவில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் 47 நாடுகளைச் சேர்ந்த ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்குபெற உள்ளன. மேலும், கண்காட்சி அரங்கில் ராணுவத் தளவாடங்கள், பீரங்கிகள், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியின் துவக்க விழா நிகழ்வில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை சார்பில் முதல் முறையாக தமிழகத்தில் கண்காட்சி நடத்தப்படுகிறது. 'மேக் இன் இந்தியா' என்ற பிரதமரின் திட்டத்தில் இந்திய ராணுவத்துறையின் தளவாட பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ராணுவ தளவாட பொருட்களை, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது படிப்படியாக குறைக்கப்படும். மேலும், அந்த பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ, எச்.ஏ.எல்., பி.எச்.இ.எல்., போன்ற நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை ஊக்குவிக்கவே இந்த கண்காட்சி நடத்தபடுவதாகவும், நாளை சென்னை வரவுள்ள மோடி இந்த நிகழ்ச்சியை முறைப்படி துவங்கி வைப்பார் என்றும் தெரிவித்தார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications