சுதந்திரம் பெற்றதிலிருந்தே கியூவில்தானே நிற்கிறோம் தலைவர்களே.. ஒரு விரக்தி மெசேஜ்!
பணத்தை மாற்றுவதற்காக சாமானிய மக்கள் வரிசையில் நிற்கின்றனர் என்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினர் கூச்சலிட்டு அவையை முடக்கி வருகின்றனர்.
சென்னை: என் இனிய அரசியல்வாதிகளே... நாங்கள் இன்று நேற்றல்ல சுதந்திரம் பெற்றதில் இருந்தே மணிக்கணக்கில் வரிசையில் நிற்கிறோம். அப்போதெல்லாம் எங்களுக்காக யாருமே குரல் கொடுக்கவில்லை. இன்றைக்கு பணம் மாற்ற வரிசையில் நிற்கும் போது மட்டும் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி அவையை முடக்குவது ஏன் என்று சாமானிய மனிதர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது வாட்ஸ் அப்பில் வைரல் ஆகி வருகிறது.
நாங்கள் எங்கெல்லாம் வரிசையில் நிற்கிறோம் தெரியுமா?
ரேசனில் பொருட்கள் வாங்க
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
பள்ளி அட்மிஷன்
கல்லூரி அட்மிஷன்
ரயில் டிக்கெட்
பஸ் பாஸ் எடுக்க
எல்பிஜி கனெக்சன் வாங்க
கரண்ட் பில் கட்ட
தண்ணீர் வரி கட்ட
மாநாகராட்சியில் வரி கட்ட
கோவில்களில் சாமி தரிசனம் செய்ய
சேல்ஸ் டேக்ஸ் அலுவலகத்தில்
பெர்த் சர்டிபிகேட்
டெத் சர்டிபிகேட்
இன்று வங்கி வாசலிலும் நிற்கிறோம்
ஓட்டு போட வரிசையிலும் நிற்கிறோம்
இதற்காக எல்லாம் நாங்கள் இத்தனை ஆண்டுகளாக வெயிலில் கால்கடுக்க நின்றிருக்கிறோம். இப்போது பணத்தை மாற்ற நேர்மையாக வரிசையில் நிற்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார் சாதாரண மனிதர்.