சென்னையில் 2 காவலர்களுக்கு டெங்கு காய்ச்சல்- அரசு மருத்துவமனையில் சிகிச்சை
சென்னையில் இரண்டு காவலர்களுக்கு டெங்கு அறிகுறி உள்ளதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை: சென்னையில் இரண்டு காவலர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதால் அவர்களுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 4000 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெங்கு கொசுவை ஒழிக்க 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களான ஈரோடு, திண்டுக்கல், கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், தேனி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4000 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அரசு மருத்துவமனை , ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து தனியார் மருத்துவமனைகளில் இருந்தும் பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. பெரும்பாலான மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் பற்றாகுறை காரணமாக காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டாலோ அல்லது பகல் நேரத்தில் அதிக அளவில் கொசுக்கள் கடித்தாலோ மக்கள், 104 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதோடில்லாமல் பிரபல திரை கலைஞர்கள் மூலமும், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது.
சென்னையில் மழையும், வெயிலும் மாறி மாறி தாக்கி வருவதால் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து விட்டது. டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டு காவலர்களுக்கு டெங்கு அறிகுறி உள்ளதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய குற்றப்பிரிவைச் சேர்ந்த திபு, ஆயுதப்படையில் உள்ள பார்த்திபன் ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கு மருந்துகளோ அதி நவீன மருத்துவ சிகிச்சைகளோ தேவையில்லை. டெங்கு கொசு கடிப்பதினால் உடலில் உள்ள ரத்த அணுக்கள் குறைந்துவிடாமல் பாதுகாக்கும் வகையில் அதிக அளவு தண்ணீர், பழங்கள், நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு போன்றவற்றை உட் கொண்டாலே ரத்த அணுக்கள் அதிகரித்து, உடல் நிலை சீராகி, டெங்கு காய்ச்சல் குணமாகும் எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications