அஸ்வினி மரணம் வேதனை அளிக்கிறது.. துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
மாணவி அஸ்வினி கொலைக்கு துணைமுதல்வர் ஓ பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: மாணவி அஸ்வினி கொலைக்கு துணைமுதல்வர் ஓ பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் வைத்து அஸ்வினி என்ற அதே கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்த மாணவியை அழகேசன் கழுத்தையறுத்து கொலை செய்தார். தற்போது அழகேசன் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஒருதலை காதலால் ஏற்றுக்கொள்ளாததால் அஸ்வினி கொல்லப்பட்டு இருக்கிறார். தமிழகம் முழுக்க இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் மாணவி அஸ்வினி கொலைக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது அவர் டிவிட் செய்துள்ளார்.
சென்னையில் கேகே நகர் தனியார் கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது. மனிதநேயமற்ற, மனித உணர்வுகளை மதிக்காத, இத்தகு வன்செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
— O Panneerselvam (@OfficeOfOPS) March 9, 2018
அவர் தனது டிவிட்டில் ''சென்னையில் கேகே நகர் தனியார் கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது. மனிதநேயமற்ற, மனித உணர்வுகளை மதிக்காத, இத்தகு வன்செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.'' என்றுள்ளார்.
குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பகுத்தறியும் பண்பான இளம்தலைமுறையால் தமிழகம் தலை நிமிர வேண்டும்.
— O Panneerselvam (@OfficeOfOPS) March 9, 2018
இன்னொரு டிவிட்டில் ''குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பகுத்தறியும் பண்பான இளம்தலைமுறையால் தமிழகம் தலை நிமிர வேண்டும்.'' என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications