தத்தளிக்கும் தனுஷ்கோடி மீனவர்கள்.... கண்டுகொள்ளுமா அரசு?: வீடியோ
புயலில் அழிந்துபோன தனுஷ்கோடியில் வாழும் 300 குடும்பங்கள், தங்களுக்கு அரசு அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மீனவ மக்கள் அவதியுறுகிறார்கள். அவர்களுக்கு அரசு உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் தென்கோடியிலுள்ள தனுஷ்கோடி, 1964ஆம் ஆண்டு கோரப் புயலுக்கு இரையாகி மொத்த ஊரும் அழிந்து சின்னாபின்னமானது. அந்த நிமிடத்தில் இருந்து அந்த அழிவிலிருந்து மீண்டுவரவில்லை என்பது துயரம்.

இந்நிலையில் இன்னும் அங்கு 300 மீனவக் குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்கள் தரை வலை மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அங்கு மக்கள் வாழ அடிப்படைத் தேவையான மின்சாரம், குடிநீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. ஆகையால் அரசு தங்களுக்கு வாழ்வதற்கான அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications