சசிகலா, இளவரசி, சுதாகரனை "அன்போடு" வரவேற்கத் தயாராகும் பரப்பன அக்ரஹாரா சிறை!
சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அளித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்படுவார் என்பதால் அதற்காக சிறை அறைகள் தயாராகி வருகிறது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 21 ஆண்டுகளாக நடந்தது. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. அதில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கும 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 4 வாரத்தில் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே, கர்நாடக மாநிலத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இதே வழக்கில் நீதிபதி குன்ஹா ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் சிறை தண்டனை வழங்கிய போது, இதே பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் தான் அடைத்து வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications