ஐபிஎஸ் ஆபிசருங்களே... விஜயகாந்த் படத்தை பாருங்க- அடுத்து நாங்கதான் ஆளுங்கட்சி பிலேமலதா
ஐ.பி.எஸ். அதிகாரிகள் எப்படி கடமையாற்ற வேண்டும் என்பதை விஜயகாந்த் நடித்த சினிமா படங்களை பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி : இரண்டாக உடைந்த அதிமுக இனி இணையாது. இரட்டை இலை சின்னமும் கிடைக்காது. இதனால் அதிமுக இனி ஆட்சிக்கு வர முடியாது. தே.மு.தி.க. விரைவில் மாநிலத்தை ஆளும்கட்சியாக மாறும் என்று அக்கட்சியின் மாநில மகளிரணி தலைவி பிரேமலதா கூறியுள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரிகள் எப்படி கடமையாற்ற வேண்டும் என்பதை விஜயகாந்த் நடித்த சினிமா படங்களை பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குமரி மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ஜெகநாதனை திருவட்டார் போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், காவல்துறையினரை கடுமையாக சாடினார். குமரி மாவட்டத்தில் மக்கள் பணியாற்றி வந்த மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு தீவிரவாதியை போல அவரை இழுத்துச் சென்றுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.

ஐபிஎஸ் அதிகாரி
ஜெகநாதனை கைது செய்த அதிகாரி இப்போதுதான் ஐபிஎஸ் முடித்து பயிற்சியில் இருக்கிறார். இவரது நடவடிக்கை மூலம் ஐபிஎஸ் பணியில் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரிகள் எப்படி கடமையாற்ற வேண்டும் என்பதை விஜயகாந்த் நடித்த சினிமா படங்களை பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும்.

ஐபிஎஸ் ஆக ஆசைப்பட்டேன்
நானும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஆனால் என் குடும்பத்தினர் என்னை விஜயகாந்திற்கு திருமணம் செய்துகொடுத்தனர். இப்போது நான் நாட்டை ஆளும் தலைவருடன் இருக்கிறேன். ஐபிஎஸ் அதிகாரி ஆகாமல் இருந்ததற்கு நன்றி கூறுகிறேன். ரமணா படத்தை பார்த்த மலேசிய அதிகாரி ஒருவர் விஜயகாந்துதான் எனது ரோல்மாடல் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவிற்கு சரிவு
ஆர்.கே.நகரில் தொப்பி போட்டு திரிந்தவர்கள் எல்லாம் இப்போது திகார் ஜெயிலில் இருக்கிறார்கள். அதிமுக சின்னத்தை இழந்து நிற்கிறது. முதல்வர் பதவி யாருக்கு? பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என்று அதிமுகவினர் போட்டி போடுவதால் இரண்டாக உடைந்த அந்த கட்சி இனி இணையாது. இரட்டை இலை சின்னமும் கிடைக்காது. இதனால் அதிமுக இனி ஆட்சிக்கு வர முடியாது.

ஞானம் வந்ததா?
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று அவரது சமாதியில் அரை மணி நேரம் தியானம் செய்த பிறகு ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஞானம் பிறந்து உள்ளது. 75 நாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவருக்கு ஞானம் வரவில்லை. முதல்வர் பதவி பறிபோன பிறகு தான் ஞானம் பிறந்துள்ளது.

எல்லாம் மர்மம்
ராம மோகனராவ் வீட்டில் நடந்த சோதனை. கொடநாடு காவலாளி கொலை, கார் டிரைவர் சாவு போன்றவற்றில் மர்மம் உள்ளது. நீட் தேர்வு மூலம் தரமான கல்வி கிடைக்கும் என்று நாங்கள் ஏற்கனவே கூறி வருகிறோம். நீட் தேர்வை அரசியலாக்க விரும்ப வில்லை.

திமுகவிற்கு முற்றுப்புள்ளி
2011, 2016ல் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் முற்றுபுள்ளி வைத்தது தேமுதிகதான். தற்போதைய ஆட்சி விரைவில் கவிழ்வது உறுதி. தமிழகத்தில் விரைவில் ஜனாதிபதி ஆட்சி வரும். பொதுத் தேர்தலும் நடைபெறும். அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு தினமும் முக்கிய செய்தி வரும்.

தேமுதிக ஆளுங்கட்சி
மக்கள் பணியாற்றும் தேமுதிகவை ஒடுக்க நினைக்கிறார்கள். அது ஒருபோதும் முடியாது. விரைவில் தேமுதிக மாநிலத்தை ஆளும்கட்சியாக மாறும். அப்போது நாங்கள் போலீசாரை பழிவாங்க மாட்டோம். மக்கள் நலனில்தான் அக்கரைக் காட்டுவோம் என்று அதிரடி சரவெடியாக பேசி முடித்தார் பிரேமலதா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications