குண்டுகள் வெடிக்கிறது, எப்போது உயிர் போகும் என தெரியவில்லை: ஈராக்கில் சிக்கியுள்ள தூத்துக்குடி நர்ஸ்
சென்னை: ஈராக்கில் இந்திய நர்ஸுகள் பணிபுரியும் மருத்துவமனை மீது குண்டுகள் வீசப்படலாம் என்றும், தங்களின் உயிர் எப்போது போகும் என்று தெரியவில்லை என்றும் அங்கு சிக்கியுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த நர்ஸ் ரெஜிமா தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள். பலுஜா, மொசுல் நகரை பிடித்த தீவிரவாதிகள் ஈராக்கின் முன்னாள் அதிபரான சதாம் உசேனின் ஊரான திக்ரித் நகரை கைப்பற்றினர். ஈராக் ராணுவம் திக்ரித் நகருக்குள் புகுந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி நகரை மீட்டது. அந்த நகரில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 46 நர்ஸுகள் உள்ளனர்.
நகரை ராணுவம் மீட்டுள்ள நிலையிலும் இந்திய நர்ஸுகள் மருத்துவமனையில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திக்ரித் நகரில் சிக்கியுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த நர்ஸ் ரெஜிமா தொலைபேசி மூலம் தமிழக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில்,
இந்தியாவை சேர்ந்த நர்ஸுகள் உள்ள திக்ரித் போராட்டக்காரர்களின் பிடியில் உள்ளது. மருத்துவமனையில் டாக்டர்கள், நோயாளிகள் என்று யாரும் இல்லை. நாங்கள் இந்திய நர்ஸுகள் மட்டுமே உள்ளோம். மருத்துவமனை வளாகத்தில் குண்டுகள் வீசப்பட்டன. நேற்று திக்ரித் மருத்துவமனை வளாகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்தன. நாங்கள் உள்ள மருத்துவமனையிலும் எந்நேரத்திலும் குண்டுகள் வீசப்படலாம். எங்கள் உயிர் எப்போது போகப் போகிறது என்று தெரியவில்லை என்றார்.
மருத்துவமனையில் சிக்கியுள்ள மற்றொரு இந்திய நர்ஸான மரினா ஜோஸ் பிபிசிக்கு தெரிவிக்கையில்,
இரவு முழுவதும் மருத்துவமனையை சுற்றி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. ஹெலிகாப்டர்களில் இருந்து குண்டுகளை வீசுகிறார்கள். இங்கு எங்களால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு செஞ்சிலுவை சங்கத்தினர் வந்து பாக்தாத் செல்லும் சாலைகள் சரியானதும் எங்களை அழைத்துச் செல்வதாக கூறினர். தயவு செய்து எங்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்றார்.
ஆனால் திக்ரித்தில் உள்ள இந்திய நர்ஸுகள் பாதுகாப்பாக உள்ளார்கள் என்றும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் இன்று தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications