திடீர்னு மழை வந்து வெள்ள சேதம் ஆகிப் போச்சு.. அரசை குறை சொல்ல கூடாது.. இது நாட்டாமை பேச்சு
தென்காசி: கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதத்தை அரசியலாக்க வேண்டாம் என சமக தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
தென்காசியில் சட்டமன்ற உறுப்பினரும், சமக தலைவருமான சரத்குமார் செவ்வாய்க்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தென்காசி நகராட்சிப் பகுதியில் 18 ஆயிரத்து 671 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்ரை வழங்கினார். பின்னர் தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு சென்று அங்கு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அங்கிருந்து அவர் வெளியே வரும் போது பொதுமக்கள் சிலர் மருத்துவமனையில் சுகாதாரம் இல்லை என்றும், துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றம் சாட்டினர். அது விரைவில் சீர் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். பின்னர் தென்காசி நெல்லை சாலையில் உள்ள டீக்கடைக்கு சென்ற அவர் அங்கு டீ குடித்தார். அதனைத் தொடர்ந்து பழைய குற்றாலம் மத்தாளம் பாறை சாலையில் திங்கட்கிழமை மழையால் சேதம் அடைந்த உப்பனான் குளம் பகுதியையும், தண்ணீரால் சேதம் அடைந்த வயல் வெளிகளையும் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் திடீர் என ஏற்பட்ட மழை காரணமாக வெள்ள சேதம் உருவானது. இதனை யாரும் குறைகூற முடியாது. இயற்கை சீற்றம் எப்போது வரும் என்பது தெரியாது. இருந்தாலும் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்டு நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டு தீர்வை கண்டு வருகிறது. இதனை அரசியல் ஆக்காமல் மக்களின் நிலையை புரிந்து அரசோடு ஒத்துழைத்து நிவாரப் பணிகளை அனைவரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும்.
அரசியல் கட்சிகள் தவறான குற்றச்சாட்டுக்களை கூறுவது நல்லதல்ல. இது போன்ற சூழலில் வருமுன் காப்போம் என்ற நிலையில் அனைவரும் இருக்க வேண்டும். இனி வரும் காலங்களில் பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். தென்காசி பகுதிகளில் வெள்ள சேதம் குறைவு தான் என்றாலும் வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் அதிகாரிகளிடம் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications