சென்னையில் வறட்சிதான்... உள்மாவட்டங்களில்தான் மழை - வானிலை மையம்
சென்னையில் வறண்டவானிலையே நிலவும் என்றும், உள் மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் வரும் நாட்களில் வறண்ட வானிலையே தொடரும் எனவும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகம் முழுவதும் காலை முதலே பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் தேவதானபட்டி ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதே போல் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் சுற்று வட்டாரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சை, கடலூர் மாவட்டங்களிலும் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் மற்றும் மன்னார் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தென் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தண்ணீர் பஞ்சம் தீரும் என்று பொதுமக்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் கடலோரம் மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வரும் நாட்களில் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வரும் நாட்களில் வறண்ட வானிலையே தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications