துபாயில் பதுங்கியுள்ள 'டான்' ஸ்ரீதரின் ரூ.150 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்க துறை அதிரடி
சென்னை: பல்வேறு குற்றச்சாட்டின் தேடப்பட்டு வரும் குற்றவாளியான காஞ்சிபுரம் தனபாலன் ஸ்ரீதர் என்பவரி்ன் ரூ.150 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கம் செய்துள்ளது. இதனால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தனபாலன் ஸ்ரீதர் என்றால் சென்னையில் அவரது குடும்பத்தைத் தாண்டி யாருக்குமே தெரியாது.. ஆனால் டான் ஸ்ரீதர் என்றால் ஒட்டு மொத்த டான் கூட்டங்களுக்கும் ரொம்ப நன்றாகத் தெரியுமாம். இவர் மீது 7 கொலை உள்பட 43 வழக்குகள் இருக்கிறதாம்.

சோட்டா ராஜன் பெயரைக் கேட்டாலே பலருக்கு மும்பையில் டரியல் ஆகும். ஆனால் இந்த ஸ்ரீதர் ஒரு ரியல் டான்.. அதாவது ரியல் எஸ்டேட் டான் பாஸ். ரியல் எஸ்டேட் மட்டும்தான் இவரது ரகளை ஏரியா. இவரை தமிழகத்தின் தாவூத் என்று செல்லமாக கூப்பிடுகிறார்கள்.. ஆமாங்க, தமிழக போலீஸே அப்படித்தான் கூப்பிடுது.
தமிழக காவல்துறையால் அதிகம் தேடப்படும் நபராம் இவர். இவரும் துபாயில்தான் பதுங்கியுள்ளார். துபாயில் பதுங்கியிருந்து கொண்டே தன்னுடைய ஆட்கள் மூலம் சென்னைக்கு அருகே ரூ. 500 கோடி மதிப்பிலான ரியல் எஸ்டேட் ரவுடித்தனத்தை செயல்படுத்தி வருகிறார். பல வருடமாக தலைமறைவாகவும் இருக்கிறார்.
இந்நிலையில், தனபாலன் ஸ்ரீதரின் 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. 4 பங்களாக்கள் பல நூறு ஏக்கர் நிலம் உள்ளிட்டவற்றை முடக்கம் செய்துள்ளதால் ஸ்ரீதருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கறுப்புண பண தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பல்வேறு நபர்களை மிரட்டி சொத்துக்களை அபகரித்தது உட்பட பல்வேறு வழக்குகள் ஸ்ரீதர் மீது உள்ள நிலையில் தற்போது அவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் துபாயில் பதுங்கியுள்ள அவரை இந்தியா கொண்டு வரவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications