இணைப்பு பேச்சு: தினகரன் தரப்பு கறாராக முன்வைக்கும் 3 கோரிக்கைகள்... எடப்பாடியார் தரப்பு 'ஷாக்'
இணைப்பு பேச்சுவார்த்தைக்காக தினகரன் தரப்பு முன்வைக்கும் 3 கோரிக்கைகளால் எடப்பாடியார் தரப்பு அதிர்ந்து போயுள்ளதாம்.
சென்னை: தூக்கிய போர்க்கொடியை வெள்ளைக்கொடியாக்க தினகரன் தரப்பு முன்வைக்கும் 3 கோரிக்கைகளால் முதல்வர் எடப்பாடியார் தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
தினகரன் தரப்புக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதை உறுதி செய்து கொண்ட டெல்லி இணைப்புக்காக சென்னை பிரமுகர் மூலமாக பேச்சுவார்த்தையை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் தினகரன் கறப்பு 3 கோரிக்கைகளை கறாராக முன்வைத்துள்ளதாம்.
அதாவது, தற்போதைய அமைச்சர்கள் 11 பேரை நீக்கிவிட்டு நாங்கள் சொல்கிற நபர்களுக்குத்தான் அமைச்சர் பதவி; முதல்வர் கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும்; அதிமுக கட்சியும் எங்கள் வசம் இருக்க வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கைகள். டெல்லியின் பிரதிநிதியாக சென்னை பிரமுகர் பேசுவதால் எடப்பாடியார் தரப்பு எதுவும் மறுப்பு பேசாமல் மவுனமாக இருந்து வருகிறதாம்.

11 அமைச்சர்களுக்கு குறி
தினகரன் தரப்பு வலியுறுத்துவதைப் போல 11 அமைச்சர்களை நீக்கிவிட்டால் ஆட்சி கவிழ்வது நிச்சயம் உறுதி. ஏனெனில் அந்த அமைச்சர்களின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்னொரு பக்கம் போர்க்கொடி தூக்குவார்கள்.. அதனால் ஆட்சியே இல்லாமல் போய்விடும் என்பது எடப்பாடியார் தரப்பு வாதம்.

கட்சி இருந்தால் போதும்
ஆனால் தினகரன் தரப்போ, எங்களுக்கு ஆட்சியை விட கட்சிதான் முக்கியம். அதிமுக என்கிற கட்சி எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலே போதும். ஆட்சி எங்களுக்கு இப்போதைக்கு முக்கியமே இல்லை என்கிறதாம். இப்படி பேச்சுவார்த்தை நடப்பதை தெரிந்து கொண்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இப்போது தினகரன் பக்கம் சாய தொடங்கிவிட்டனராம்.

பல்ஸ் பார்த்த சீனியர்
ஓபிஎஸ் அணியில் நிச்சயம் தமக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நினைத்த சீனியரும் பல்ஸ் பார்த்திருக்கிறார். ஆனால் உங்க ஆதரவுக்கு நன்றி.. ஆனால் இப்ப வீட்டுக்கு வந்தீங்கன்னா பதவிக்காக வந்தீங்கன்னு உங்களுக்குத்தான் கெட்ட பெயர் வரும். அமைதியாக இருங்க.. நிச்சயம் உங்களுக்கு எதிர்பார்க்கிறது கிடைக்கும் என தெம்பூட்டியிருக்கிறார்களாம்.

திமுக நிராகரிப்பு
இதனிடையே தினகரனும் ஸ்டாலினும் கூட்டணி ஆட்சி அமைக்கப் போவதாக டெல்லி சட்டாம்பிள்ளை இன்னொரு பக்கம் பேசிவருகிறார். இது தொடர்பாக திமுகவில் நடத்தப்பட்ட ஆலோசனையில், அப்படி ஒரு செய்தி பரப்புவது என்பதே தினகரன் தரப்பு தமக்கான பேரத்தை வலுவாக்கிக் கொள்ளத்தான்... அவர்களாவது நம்மோடு கை கோர்ப்பதாவது.. அவர்களை எல்லாம் நம்பவே முடியாது என திடமான முடிவெடுத்திருக்கிறார்களாம்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications