ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை: முதல்வர் அறிவிப்பு
சென்னை: ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர் நிலுவைத்தொகை ரூ.750 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இன்று அறிவித்தார்.
சட்டசபையில் விதி எண் 110ன்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து கழக நிதி நிலையை சரி செய்ய யுக்திகளை கடைபிடிப்பதோடு, டீசல் விலை ஏற்றத்திற்கான தொகையை அரசு மானியமாக வழங்கியது. பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்து கட்டணத்தை குறைந்த அளவிலேயே வைத்துள்ளது. போக்குவரத்து துறை நஷ்டத்தை போக்க ரூ.5138.5 கோடி அளவுக்கு ஜெ. அரசு நிதி ஒதுக்கியது.

போக்குவரத்து கழகத்தில் 30.12.2017 வரையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே இந்த தொகை அவர்களுக்கு வழங்கப்படும். இப்போது அரசால் வழங்கப்படும் இத்தொகையுடன் சேர்த்து போக்குவரத்து கழக ஓய்வூதிய பலன்களாக 2143 கோடி அளவுக்கு வழங்கியுள்ளது.
எனவே போக்குவரத்து கழக ஊழியர்கள் கோரிக்கை பலவற்றை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதால், பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிஐடியூ அமைப்பின் சவுந்திரராஜன் இதுகுறித்து கூறுகையில், முதல்வர் அறிவிப்பில் எதுவும் விஷேசம் இல்லை. எங்களிடமிருந்து ஆண்டுக்கணக்கில் கையாடல் செய்து வைத்த பணத்தைதான் அரசு திரும்ப வழங்குகிறது. இது ஊழியர்கள் பணம்தான். ஏதோ அவர்கள் பணத்தை தூக்கி தருவதை போல மக்களிடம் காட்டிக்கொள்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications