மதுவிலக்கு பற்றிய அறிவிப்பே இல்லையே... போராட்டம் தீவிரமடையும்.. ஜெ.வுக்கு இளங்கோவன் 'வார்னிங்'
சென்னை: சுதந்திர தின உரையில் மதுவிலக்கு பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் முதல்வர் ஜெயலலிதா வெளியிடாததற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் மதுவிலக்குப் போராட்டம் இன்னமும் தீவிரமடையும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் 69வது சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் கட்சியினருக்கு இனிப்புகளை வழங்கி, கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:
மதுவிலக்கு தொடர்பாக சில அறிவிப்புகள் வரும் என்று தமிழகம் முழுவதும் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள்.
ஆனால் ஜெயலலிதா ஏதோ பென்சன் தொகை 500 ரூபாய், 250 ரூபாய் என்று உயர்த்தியதை மட்டும் அறிவித்துவிட்டு உருப்படியான திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை.

மதுவிலக்கு பற்றி எதையும் சொல்லவில்லை. ஆகவே மதுவிலக்கு வேண்டும் என்ற போராட்டம் தமிழகத்திலே இன்னும் தீவிரமாக நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
-
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்











Click it and Unblock the Notifications