டீல் பேசலாம் வாங்க.. தீபாவை போனில் கூப்பிட்ட டுபாக்கூர் ஐடி அதிகாரி
டீல் பேச வேண்டும் என்று தீபாவை போலி வருமான வரித்துறை அதிகாரி அழைத்ததாக தீபா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: டீல் பேச வேண்டும் என்றே தீபாவை போலி வருமான வரித் துறை அதிகாரி அழைத்ததாக தீபா தமிழ் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார்.
இன்று அதிகாலை தி.நகரில் சிவஞானம் தெருவில் வசிக்கும் தீபாவின் வீட்டுக்கு ஐடி அதிகாரி என்று சொல்லிக் கொண்டு மித்தேஷ் குமார் என்பவர் வந்தார்.
அப்போது தீபாவின் கணவர் மாதவன்தான் வீட்டில் இருந்தார். 10 மணிக்கு மேல் மேலும் 10 அதிகாரிகள் வந்தவுடன் சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக அந்த அதிகாரி தீபாவை தொடர்பும் கொண்டு பேசினார்.

போலீஸுக்கு தகவல்
தகவலறிந்த தீபாவின் வழக்கறிஞர் சம்பவ இடத்துக்கு வந்தார். மித்தேஷ் குமாரின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவருக்கு சந்தேகம் வந்ததை அடுத்து அவர் போலீஸுக்கு தகவல் அளித்தார்.

முன்னுக்கு முன் முரண்
மித்தேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக அவர் கூறினார். இதையடுத்து போலீஸார் துருவி துருவி கேட்டதை அடுத்து சற்று எதிர்பாராத நேரமாக பார்த்து 10 அடி சுவரில் எகிறி குதித்து தப்பி சென்றார்.

3 தனிப்படை
இவரை பிடிக்க மாம்பலம் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலி அதிகாரியை பிடிக்க தேனாம்பேட்டை, தி.நகர், வடபழனி காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மர்ம நபரின் புகைப்படத்தை ரயில் நிலையங்கள், பொது இடங்களில் காட்டி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தீபா தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எனக்கு காலை வீட்டிலிருந்து போன் வந்தது. அப்போது மித்தேஷ் குமார் என்ற அதிகாரி சோதனை மேற்கொள்ள வந்துள்ளதாக கூறினர்.

டீல் பேச அழைத்தார்
அச்சமயம் என்னுடைய உதவியாளரிடம் இருந்து போனை வாங்கி அந்த அதிகாரியே பேசினார். அப்போது அவர் இன்னும் 15 நிமிடத்துக்குள் வீட்டுக்கு வருமாறு கூறினார். மேலும் என்னிடம் ஏதோ டீல் பேச வேண்டும், நீங்கள் வராவிட்டால் நான் சோதனையிடுவேன் என்றும் கூறினார்.

அதிகாரி தப்பி விட்டார்
என்ன டீல் பேச போகிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த நபர் எதையும் கூறவில்லை. பின்னர் எனது அட்வகேட்டிடம் தகவல் கூறினேன். அவர் போலீஸிடம் கூறினார். அவர்கள் வந்து விசாரித்தவுடன் அந்த அதிகாரி தப்பி ஓடி விட்டார். போலி அதிகாரி என்னை மிரட்டவோ, அச்சுறுத்தவோ வந்திருக்கலாம். இல்லாவிட்டால் எங்கள் வீட்டில் ஏதேனும் திருடும் முயற்சிக்காகவும் வந்திருக்கலாம் என்றார் தீபா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications