விவசாய கடன் தள்ளுபடியால் பெரும்பாலான விவசாயிகளுக்கு பலன் இல்லையாம்
சென்னை: விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளபோதிலும், அதனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு பலன் கிடைக்காது என்பதே நிதர்சனம்.
மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த 5 திட்டங்களில் ஒன்று பயிர்க்கடன் தள்ளுபடி என்பது. இதன் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி செலவாகியுள்ளதாக தெரியவருகிறது.
இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், சிறு குறு விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களுக்குதான் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் ஒரு விவசாயிதான் சிறு குறு விவசாயி. ஒரு விவசாயி அவரது பெயரில் 5 ஏக்கருக்கும் கூடுதலாக ஒரு சென்ட் நிலம் வைத்திருந்தாலும், அவர் சிறு குறு விவசாயி என்று கருதப்படமாட்டார். அதனால், அவருடைய கூட்டுறவுப் பயிர்க் கடன் தள்ளுபடி ஆகாது.
அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்த கொங்கு மண்டலத்தில் சிறு குறு விவசாயிகள் குறைவுதான்.
எனவே, மேற்கு மண்டலத்தில் மிகக் குறைவான விவசாயிகளே இதன் மூலம் பயன் அடைவார்கள்.












Click it and Unblock the Notifications