30 செ.மீ.. 50 செ.மீ. மழை.. சென்னைக்குத்தான் இது அபாயகரம்.. ஆனால் ஒரு விவசாயிக்கு?
காங்கிரீட் காடுகளாகிப் போன சென்னை நகரத்துக்கு 30 செ.மீ மழை பெருந்துயரம். ஆனால் இந்த மழையாவது கிடைக்குமா என்பதுதான் உள்மாவட்ட விவசாயிகளின் ஏக்கம்.
Recommended Video

திண்டுக்கல்: சென்னையில் 30 செ.மீ மழை.. இன்னும் 50 செ.மீ மழை பெய்யும் என்றெல்லாம் வரும் செய்திகள் சென்னைவாசிகளை பயங்கர பீதிக்குள்ளாக்குகிறது. ஆனால் திண்டுக்கல் போன்ற உள்மாவட்ட விவசாயிகள் பார்வையோ ஆகப் பெரும் ஏக்கமாகத்தான் இருக்கிறது என்பதே யதார்த்தம்.
140 ஆண்டுகாலத்துக்கு பிறகு மிக மோசமான வறட்சியை தமிழகம் கடந்த ஆண்டு எதிர்கொண்டது. கடந்த சில ஆண்டுகளாக திண்டுக்கல் போன்ற வறட்சி மாவட்டங்களில் நெல் சாகுபடி என்பதே மருந்துக்கு கூட இல்லாத பெரும் கொடுமை இருந்தது.
என்னதான் நிலத்தில் போட்டாலும் அத்தனையும் காய்ந்து கருகிப் போய் கும்பி வெடித்து குமுறுகிற நிலையில்தான் விவசாயிகள் இருந்தனர். கடந்த சில மாதங்களாக தலைகாட்டி வரும் மழைதான் இப்போதைக்கு மிகப் பெரும் ஆறுதலாக உள்மாவட்ட விவசாயிகளுக்கு இருந்து வருகிறது.

தலையெடுத்த விவசாயம்
அப்படி தலைகாட்டிய மழையால் போர்வெல்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் கிணறுகளில் இன்னமும் நீர் ஊறவே இல்லை. இந்த போர்வெல் நீரை வைத்துதான் மீண்டும் நெல் உள்ளிட்ட வேளாண் சாகுபடி தலையெடுத்திருக்கிறது.

பேரவலத்தில் பெருநகரங்கள்
இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 30 செ.மீ மழை பெய்திருக்கிறது. இந்த 30 செ.மீ மழையை தாங்க முடியாத காங்கிரீட் காடுகளாகிப் போன பெருநகரங்கள் பேரவலத்தை எதிர்கொண்டுள்ளன.

30 செ.மீ போதாது
அதேநேரத்தில் இந்த 30 செ.மீ மழை பெய்தாலும் கூட திண்டுக்கல் போன்ற உள்மாவட்டங்களுக்கு திருப்தி தரக்கூடியதாக இருக்காது என்பதே விவசாயிகளின் கருத்து. பொதுவாக கிராமப்புறங்களில் மிக அதிகமாக 5 செ.மீ மழை அளவுக்கு பெய்தால் ஒரு உழவு மழை என சொல்வது உண்டு.

ஓரளவுக்கு உதவும்
இப்போது சென்னையில் பெய்திருக்கும் 30 செ.மீ மழை என்பது அதிகபட்சம் 6 உழவு மழைதான் இப்பகுதி விவசாயிகளுக்கு.. இந்த 6 உழவு மழை பெய்திருந்தாலும் ஒரே ஒரு நன்மைதான் கிடைக்குமாம்..அதாவது பாழடைந்து போன கிணறுகளில் நீர் ஊற்று பிடிக்கும் அவ்வளவுதானாம்.. அந்த அளவுக்கு கிராமங்களின் மண் வறண்டுபோய் கிடக்கிறது.

கிடைக்குமா 30 செ.மீ. மழை?
அதேபோல் இங்கே ஏரிகள் எதுவுமே இல்லை. அத்தனையும் குளங்கள்தான். குளங்கள் களிமண்ணை கொண்டவை என்பதால் நீர் பூமிக்குள் இறங்காமல் குளங்கள் நிரம்பி வழியவும் வாய்ப்பிருக்கிறது. இப்படி ஒரு 6 உழவு மழை ஆண்டுக்கு ஒரு முறை வந்தால்கூட போதுமே என்பதுதான் உள்மாவட்ட விவசாயிகளின் ஏக்கம்.
இயற்கையே கருணை காட்டு!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications