மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம்... சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
தமிழக மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 தினங்களுக்கு சென்னையில் மழை கொட்டியது.
இதுவரை 3 காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகியது. இவற்றால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் தற்போது வங்கக் கடலில் 4-ஆவதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

எங்கே உள்ளது
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 1160 கி.மீ தொலைவில் இது மையம் கொண்டுள்ளது.

மிதமான மழை
இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டம் ஆயக்குடியில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பெய்துள்ளது. ஓகி புயல் குறித்து வானிலை மையத்துக்கு வந்த தகவல்களை அரசுக்கு உடனுக்குடன் அனுப்பி கொண்டுதான் இருந்தோம்.

கடலுக்குள் செல்ல வேண்டாம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8-ஆம் தேதி கரையை கடக்கும்போது காற்று பலமான வீசக்கூடும் என்பதால் தமிழக மீனவர்கள் அடுத்த 3 தினங்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.

ஏற்கனவே கோரிக்கை
ஏற்கனவே கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதேபோல் புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications