எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது
சென்னை: ஆந்திர கடலோர எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக கடலோர காவல் படையினர் நேற்று முன்தினம் ராஜ்தரங் கப்பலில் தமிழக - ஆந்திர கடலோர எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கடற்கரையில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திர கடல் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்து இலங்கை மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்ததை பார்த்தனர்.
இதையடுத்து அந்த படகை பறிமுதல் செய்த அதிகாரிகள், அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து கொண்டிருந்த 5 இலங்கை மீனவர்களையும் சென்னை துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். ஆனால் கடல் சீற்றம் காரணமாக படகு சென்னை துறைமுகத்திற்கு வந்து சேர்வதில் தாமதமானது.
இந்நிலையில் நேற்று காலை தமிழக கடலோர காவல் படையினர் கைது செய்த 5 இலங்கை மீனவர்களையும், அவர்களிடம் இருந்து கைப்பற்றிய படகையும் சென்னை துறைமுக போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து துறைமுக போலீசார், ஆந்திர கடல் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்தனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications