'சின்னம்மாவின் குரல் இனிமையாக இருக்கும்' ...சிலிர்த்த வளர்மதிக்கு "பரிசு"!!

"சின்னம்மா"வின் குரல் இனிமையாக இருக்கும் என புகழ்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சின்னம்மா"வின் குரல் இனிமையாக இருக்கும் என புகழ்ந்து தள்ளிய அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு பரிசு வழங்கியுள்ளது தமிழக அரசு. அவர் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா கடந்த 31ஆம் தேதி பதவியேற்றார். அதுவரை அவர் வெளியுலகில் பேசாமல் இருந்ததால் அவரது குரலைக் கேட்க மக்கள் ஆர்வமாக இருந்தனர்.

Former ADMK Minister Valarmathi becomes chairman of the Council of the textbook.!!

அப்போது பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, சசிகலாவின் குரல் இனிமையாக இருக்கும் என புகழ்ந்து தள்ளினார். இதையடுத்து அவருக்கு அதிமுக அரசு சார்பில் "பரிசு" வழங்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா இதுதொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவில், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

அவரது நியமனம் தொடர்பான விதிமுறைகள் பின்னர் தனியாக பிறப்பிக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது இலக்கிய அணி செயலாளராக உள்ள பா.வளர்மதி, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து குடும்பத்துடன் சசிகலாவை சந்தித்து ஆசி வாங்கிக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+