இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்கிறது... மேலும் 4 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்ற சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தடை காலம்கடந்த 29-ந் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, திங்கள் கிழமை முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடலுக்கு சென்ற முதல் நாளே ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 293 விசைப்படகுகளிலும், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 211 விசைப்பட குகளிலும் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்களில் கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்த தியாகு, மணி, பாலா, சந்திரன் ஆகிய நான்கு பேரும் நெடுந்தீவு பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 4 மீனவர்களையும், அவர்களது படகையும் சிறை பிடித்தனர். பின்னர் 4 மீனவர்களையும் இலங்கையிலஉள்ள காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவது தொடர் கதையாகிவருகிறது. இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவே பயமாக உள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications