"கவுண்டர்" அன்னிக்கே சொல்லிட்டார்.. யாராச்சும் கேக்குறீங்களாப்பா...!
சென்னை: குடியை ஒழிக்க வேண்டும், டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று தமிழகத்தில் திடீரென கோஷங்கள் விண்ணை முட்ட ஆரம்பித்துள்ளன. குடி குடியை கெடுக்கும் என்ற லேபில் ஒட்டிய பாட்டிலை வாங்கிதான் குடிகாரர்களும் குடித்துக்கொண்டு உள்ளனர்.
மதுவிலக்கு கொண்டுவருவோம் என்கிறது திமுக, முதலில் திமுகவினர் நடத்தும், மதுபான ஆலைகளை மூடுங்கள் என்கிறது அதிமுக. சிகரெட் கம்பெனி ஏஜென்சிதான் மகன் நடத்துகிறான், அது ஒன்றும் மதுபானம் போல தீங்கானது இல்லை என்கிறார் மதுவிலக்கு போராளியாக மாறிய வைகோ.

ஆனால், பல வருடங்கள் முன்பு வந்த திரைப்படம் ஒன்றில் கவுண்டமணி சொன்ன ஒரு ஐடியா, இக்காலத்திற்கு எப்படி பொருந்திப்போகிறது பாருங்கள்.
அந்த திரைப்பட காட்சியில், வினுசக்கரவர்த்தியும், கவுண்டமணியும் இப்படி பேசிக்கொள்கிறார்கள்.
வினுசக்கரவர்த்தி: ஏம்ப்பா, குடிச்சிட்டு இந்த கூத்தடிக்கிறானுங்களே. குடிய ஒழிக்க வேற வழியே இல்லையா?
கவுண்டமணி: நாட்ல குடிய தயார் பண்றதே 8 கம்பெனிதான் இருக்கு. குடிக்காதங்கன்னு பிரச்சாரம் பண்றவங்க, அந்த 8 கம்பெனிக்கும் போன் பண்ணி இத தயார் பண்ணாதீங்கன்னு சொல்லிறலாம். அதவிட்டுட்டு 80 கோடி ஜனங்ககிட்டபோய் தனித்தனியா, குடிக்காதீங்க, குடிக்காதீங்கன்னு கெஞ்சுனா எப்படீங்க நடக்கும்.
இப்படி ஒரு டயலாக் உள்ள இந்த வீடியோதான் தற்போது வாட்ஸ்அப்பில் ஹாட்-கேக் போல பரிமாறப்பட்டு வருகிறது. கவுண்டர், மஹான்தான்யா..
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications