கடல் சங்குகளை ஜெர்மனிக்கு எடுத்துச் செல்ல முயன்ற மாணவருக்கு ரூ.5000 அபராதம்
சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து ஜெர்மனிக்கு கடல் சங்குகளை கொண்டு செல்ல முயன்ற ஜெர்மனி கல்லூரி மாணவருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனிக்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. பயணிகளின் உடைமைகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஜெர்மனியை சேர்ந்த கல்லூரி மாணவரான கிஸ்க்கைஜான்ஸ் என்பவர் தனது அம்மா மற்றும் தங்கையுடன் சென்னையில் இருந்து ஜெர்மனி செல்வதற்காக வந்து இருந்தார். அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் கடல் சங்குகள், சிப்பிகள் மற்றும் பாம்பு சட்டை ஒன்றும் இருந்தது.

இதையடுத்து, அவர்களின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவர்களை கிண்டி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சென்னை வனத்துறை காப்பாளர் கீதாஞ்சலி இது குறித்து அவர்களிடம் விசாரனை நடத்தினார்.
அப்போது, அவர்கள் 3 பேரும், ஜெர்மனியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்ததாகவும், மைசூரில் சுற்றுலா சென்றபோது அங்கு நல்ல பாம்பு ஒன்று உரித்து போட்டு இருந்த சட்டையை எடுத்ததாகவும், மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றியபோது அங்கிருந்த கடல் சங்குகள், சிப்பிகளை எடுத்து வைத்து இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், ஜெர்மனி மாணவர் கிஸ்க் கைஜான்சுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். அவரிடம் இருந்த கடல் சங்குகள், சிப்பிகள் மற்றும் பாம்பு சட்டையையும் பறிமுதல் செய்யப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications