புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்றார் கிரிஜா வைத்தியநாதன்
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை: தமிழக தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தயநாதன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையிர் அவர் பொறுப்பேற்ற அவருக்கு அதிகாரிகள், தலைமைச் செயலக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து அவர் தலைமைச் செயலாளராக நீடிக்க எதிர்ப்பு கிளம்பியது.

ராமமோகனராவ் வீட்டில் வருமானவரி சோதனை நடந்ததை அடுத்து அவர் 40 நாட்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய தலைமைச்செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நேற்று நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிரிஜா வைத்தியநாதன் தமிழகத்தின் 45 வது மற்றும் 4வது பெண் தலைமைச் செயலாளர் ஆவார். இவர் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஊழல் கண்காணிப்பு பொறுப்புகளை கவனிப்பார். புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கிரிஜா வைத்தியநாதன் பின்னணி
01.7.1959ல் பிறந்த கிரிஜா வைத்தியநாதன், முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1981ம் ஆண்டு தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர்.
நல்வாழ்வு பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற கிரிஜா வைத்தியநாதன், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த கிரிஜா வைத்தியாநதன், நில நிர்வாகத் துறை ஆணையராக பதவி வகித்தார்.
தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் கண்காணிப்பு ஆணையர் பதவிகளையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications