பேச்சுவார்த்தை மூலம் விரைவில் நல்லது நடக்கும்:' ஓபிஎஸ் நம்பிக்கை!
பேச்சுவார்த்தை மூலம் விரைவில் நல்லது நடக்கும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: பேச்சு வார்த்தை மூலம் விரைவில் நல்லது நடக்கும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு முன் நிபந்தனைகள் குறித்து பேசுவது நல்லா இருக்காது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தலைமையிலான கோஷ்டிகள் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக தலா 7 பேர் கொண்ட குழுக்களை அமைத்துள்ளன. இந்த குழு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிகிறது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேச்சுவார்த்தை . மூலம் விரைவில் நல்லது நடக்கும் என்றார்.
நிபந்தனைகள் குறித்து கேள்விக்கு பேச்சுவார்த்தைக்கு முன் நிபந்தனைகள் குறித்து பேசுவது சரியாக இருக்காது என்று கூறிய அவர், நிபந்தனைகள் குறித்த 7 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தும் என்றார்.