Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகாரிகள் திட்டியதால் மனமுடைந்த வரைவாளர்... தூக்கிட்டு தற்கொலை!

நெல்லை நில அளவைத் துறையில் வரைவாளராக பணியாற்றுபவர் அதிகாரிகள் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நில அளவைத் துறையில் வரைவாளராக பணியாற்றுபவர் அதிகாரிகள் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அரசு ஊழியர் அதிகாரியின் நெருக்கடியால் உயிரிழந்ததையடுத்து இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயில் அருகில் வசித்து வந்தவர், முத்துமாலை (39). நெல்லை நில அளவைத் துறையில் வரைவாளராகப் பணியாற்றி வந்த இவருக்கு உயர் அதிகாரிகள் டார்ச்சர் கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே முத்துமாலை மனஉளைச்சலில் இருநத்தாக தெரிகிறது.

Government staff committed suicide at Thirunelveli due to stress

நேற்று வழக்கம் போல பணி முடிந்த வீடு திரும்பியவர் யாரிடமும் பேசாமல் இருக்கமான முகத்துடனே காண்ணப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவருடைய வீட்டில் இருந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் முத்துமாலை உடல் மீட்கப்பட்டது. மன உளைச்சல் காரணமாக முத்துமாலை உயிரிழந்தாரா என்று பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+